கேட்க திகட்டாத இசை
கேட்டாலும் மற்க்காத ஓசை
'வெண்னிலவே'வில் நான்
வின்னுக்கே செல்கிறேன்
இசை எனும் அமுதினை
உண்ட அனுபவம்.
'அன்பென்ற மழையிலே'
இசை மழை பொழிந்து
அதிரூபனை நினைவுபடுத்திய
அழகிய, அர்த்த்முள்ள இசை.
ஆசைக்காக
'தங்கத்தாமரை' இசை
பழைய விளக்கில் புதிய எண்ணெயுடன்
எரியும் ஒரு உற்சாக விளக்கு.
'பூ பூக்கும் ஓசையில்'
நான் கேட்ட புதிய ஓசை
நேஞ்சை நெகிழ்விக்கும்
நீண்ட கால ஆசை.
'மான மதுரையில்' - நான்
குஷியாக கேட்ட குற்றால இசை.
இத்தனையும் தந்த - இனிய
இளைய ரஹ்மானே
வாழ்த்துகிறேன் உன்னை
வழங்கிவிட்டேன் என்னை
வாழ்நாள் முழுவதும் - உன்
இசை கேட்க.
(இயற்றிய தேதி: 19/6/1997)
No comments:
Post a Comment