Tuesday, August 5, 2008

குலதீப்பும் டீக்கடையும் பாகம் – 2

டீ கடையிலிருந்து வீட்டிற்கு நடந்து வரும்போது எண்ணிக்கொண்டேன், “காலை உணவை எத்தனைமுறை தவறவிட்டிருக்கிறோம் என்று”. ஆனால் குலதீப் அப்படி இல்லை. அவனுக்கு டீதான் காலை உணவு என்பது சொல்லாமலே புரிந்தது. எனது எண்ண அலைகளில் குறுக்கிட்டது எனது வீட்டு படிகள்.

வீட்டிற்குள் நுழையும்போது திரும்பவும் ஒலித்தது என் கையிலிருக்கும் குலதீப்பின் செல்ஃபோன். காலையில் என்னை எழுப்பிய அதே எண். முக்கியமான தகவலாக இருக்குமோ என எண்ணி நானே அட்டன்ட் செய்ய முடிவெடுத்தேன். ஆன்சர் பட்டனை அழுத்தி ஹலோ சொன்னவுடன், எதிர் முனையில் இருக்கும் குரல் ஒலித்தது, “ஹெலோ சார்!, வீ ஆர் காலிங் ஃப்ரம் **** பாங்க் (ப்லா… ப்லா… ப்லா…) ஆர் யு கோய்ங் ஃபார் இட்?”. விருப்பமில்லை என கூறி கட் செய்தேன்.

காலையில் தொல்லை தாங்க முடியவில்லையே, இதற்காகவா குலதீப்பை தேடி சென்றோம் என எண்ணுகையில்… யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டு, கதவை திறந்தேன். குலதீப் முகம் முழுவதும் மலர்ச்சியுடன் நிற்பதை கண்டேன். எனது கையிலிருக்கும் அவனது செல்போனை பார்த்ததும், “ஃடிட் சம்படி கால் மி?” என்று கேட்டான். அவனுக்கு பதிலளிக்கும் முன், அவன் கையிலிருக்கும் டீ கப்பை பார்த்து புன்னகை வெள்ளத்தில் விழுந்தேன்.

(முற்றும்)

No comments:

Post a Comment