இது நான் எழுதிய முதல் கவிதை. 26-07-1996 அன்று எழுதப்பட்டது. இன்றும் (23-08-2008) என் நினைவில் உள்ளது இக்கவிதையை எழுத தூண்டிய காரணி.
அப்பொழுது நான் நவோதயா வித்யாலையா, புதுச்சேரி பள்ளியில் படித்து கொண்டிருந்தேன். எங்கள் பள்ளி வளாகத்தை சுற்றிலும் பச்சை பசேல் என மரங்கள் (Green belt) இருக்கும். பள்ளியில் மாலை விளையாட்டு நேரத்தில், கால்பந்து விளையடிவிட்டு நானும் என் நண்பனும் (விஜயவேலன்) மைதானத்தின் அருகில் உள்ள புல்பரப்பில் படுத்து ஓய்வெடுத்து கொண்டிருந்தோம்.
விளையாடிய களைப்பில் இருந்ததால், காற்று என்னை மென்மையாக வருடுவது போல் உணர்ந்தேன். தலையை சாய்த்து காற்று வரும் திசையில் பார்த்தபொழுது, என் கண்னில் பட்டது அழகிய பச்சை மரங்களும் (பென்சில் மரம், அப்படித்தான் அதை அழைப்போம்), அதன் அசைவுகளும். இதில் லயித்து இருக்கும் போது, என் மூக்கை துளைத்தது ஓர் துர்நாற்றம், அது எதிரே இருக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் புகையினால். அந்த கரும்புகை, மெல்ல மெல்ல பச்சை மரங்களை மூடியது. அறிவியல் ரீதியக அவை மரங்களுக்கு எற்படுத்தும் பாதிப்பை காட்டிலும், என் மனதை அது வெகுவாக பாதித்தது. அப்போழுது என் மனதில் தோன்றிய எண்ணங்களின் வெளிப்பாடே இக்கவிதை.
இயற்கை காட்சி
நான்
எங்கேயும் எப்போதும் காணக்கூடிய காட்சி
அது என்ன காட்சி?
ஓ! அதுவே இயற்கை காட்சி.
தேன்,
அது எப்போது சுவைத்தாலும் இனிமை குறையாது
அதற்கு விலையே கிடையாது
அதை ரசித்தால் பொழுதே விடியாது.
வான்,
காடு, அருவி, மலை
என அதிலே ஒரு அற்புத கலை,
இதற்கு எங்கெங்கும் கிளை.
போடுகிறார்கள் வலை – அதுவே
தொழிற்சாலைகள் வைக்கும் உலை,
கைவசம் இருக்கிறது அழிக்கும் கலை – ஆகையால்
குறைகிறது இதன் ஒப்பற்ற விலை.
(இயற்றிய தேதி: 26-07-1998)
No comments:
Post a Comment